நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டீ சொய்சா மரணம் எய்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு வயது 57.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இவர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.