(ஐ. ஏ. காதிர் கான்)
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்பு விடுதலை செய்யப்பட்ட இலங்கை இளைஞரான மொஹமட் நிஸாம்தீன், கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் குறித்த இளைஞர் முகங்கொடுத்த அவலங்கள் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பில், நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவிக்கவுள்ளார்.
இது தொடர்பிலான உண்மை நிலையை ஊடகங்களுக்குத் தெளிவூட்டும் செய்தியாளர் சந்திப்பொன்று,(இன்று) 7 ஆம் திகதி புதன்கிழமை,மாலை 3.30 மணிக்கு, இடம் : கொழும்பு – சன்கிரில்லா ஹோட்டலில் (Colombo – Shangrilla Hotel – Lotus Boll Room Yellow) இடம்பெறவுள்ளது.