Responsive Advertisement 2

வவுனியா பேரூந்து நிலையத்தில் கடமையில் பொலிஸார்



இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி கடந்த (28.11.2017) அன்று காலை தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் உட்பட வடக்கின் ஜந்து சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.





இந் நிலையில் இன்று (30.11.2017) காலை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ் பொருப்பதிகாரி பேரூந்து நிலையத்தில் அமந்திருந்த இ.போ.ச ஊழியர்களை அழைத்து மத்திய பேரூந்து நிலையத்திற்கு வருகின்ற பேரூந்துகளை உள்ளே அனுமதிக்கவும் தடுக்க வேண்டாமேன தெரிவித்தார்.





இதற்கு பதிலளித்த இ.போ.ச ஊழியர்கள் மத்திய பேரூந்து நிலையத்தினுள் வருகின்ற பேரூந்துகளை நாங்கள் தடுக்கவில்லை . எங்களது பணிப்புறக்கணிப்பு தொடர்பாக அவர்களுக்கு தெளிவூட்டுகின்றோம். அதற்கு அவர்கள் ஒத்துளைப்பு வழங்கி  செல்கின்றனர் என தெரிவித்தனர்.





அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா  பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பேரூந்து நிலையத்தில் அமந்திருந்த அனைத்து இ.போ.ச ஊழியர்களையும் அழைத்து அருகில் நின்ற பொலிஸாரை அழைத்து இவர்களின் அடையாள அட்டையினை பதியுமாறு கோரியதுடன் , இவ்விடத்தில் நின்றால் உங்களை கைது செய்வேன் என அச்சுருத்தியுள்ளார்.





பொலிஸாரின் அச்சுறுத்தலுக்குள்ளான இ.போ.ச ஊழியரோருவர் கருத்து தெரிவிக்கையில், எமது தேவை நிமிர்த்தம் மத்திய பேரூந்து நிலையத்தில் நின்ற சமயத்தில் பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டோம். எமது அடையாள அட்டைகள் பதியப்பட்டு , பெயர் விபரங்கள் பதியப்பட்டு , இனியும் இவ்விடத்தில் நின்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமேன அச்சுருத்திச் சென்றார். நாங்கள் தற்போது எங்களது தேவைக்கு கூட பேரூந்து நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை உறுவாகியுள்ளது. என தெரிவித்தார்.





இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியினை வினாவிய போது , மத்திய பேரூந்து நிலையத்தினுள் வருகின்ற பேரூந்துகளை உட்செல்லவிடாது வெளியே செல்லுமாறு அங்கிருக்கும் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பதாக எமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர்களின் அடையாள அட்டையினை பதிவு செய்தாக தெரிவித்தார்.





தற்போது மத்திய பேரூந்து நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.











வவுனியா பேரூந்து நிலையத்தில் கடமையில் பொலிஸார் வவுனியா பேரூந்து நிலையத்தில் கடமையில் பொலிஸார் Reviewed by Admin on December 01, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3