யுத்தத்தின் பின் புதிதாக கட்டப்பட்ட வைத்தியசாலை அன்றில் இருந்து இன்று வரை பூட்டிய நிலைமையிலே காணப்படுகின்றது
வட மாகண சுகாதர அமைச்சர் கெளரவ குணசீலன் ஐயா அவர்களின் கவணத்துக்கு தட்சனாமருதமடு கிராமத்திலே யுத்தத்தின் பின் புதிதாக கட்டப்பட்ட வைத்தியசாலை அன்றில் இருந்து இன்று வரை பூட்டிய நிலைமையிலே காணப்படுகின்றது . மாதத்தில் ஓரு முறை கற்பினி தாய்மாருக்கான கிளினிக் மாத்திரமே நடை பெற்று வருகின்றது .பாலம்பிட்டி கிராம சேவையாளர் பிரிவில் 350 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன . இவர்களுடைய மருத்துவ வசதி பாதுகாப்பற்ற நிலைமையிலே காணப்படுகின்றது பாம்பு கடித்தால் கூட முதலுதவி செய்வதற்கு கூட எந்த வசதிகளும் இல்லை . இங்கு இருந்து 10km தூரம் பெ.ப. வி வைத்தியசாலை செல்ல வேண்டி உள்ளது . த.ம.மடு வில் இருந்து பெ.ப.வி செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பது தாங்கள் அறிந்ததே எனவே தயவு செய்து கெளரவ வடமாகண சபை சுகாதார அமைச்சர் அவர்களே இந்த கோரிக்கையை ஏற்று கொண்டு எங்களுடைய கிராமத்தில் உள்ள வைத்திய சாலைக்கு மாதத்தில் இரு முறையாவது வைத்தியரை வந்து போவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார் கள்
வவுனியா செய்தியாளர்
யுத்தத்தின் பின் புதிதாக கட்டப்பட்ட வைத்தியசாலை அன்றில் இருந்து இன்று வரை பூட்டிய நிலைமையிலே காணப்படுகின்றது
Reviewed by Admin
on
December 06, 2017
Rating:
Reviewed by Admin
on
December 06, 2017
Rating:



No comments: