கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக 2019 ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) நேற்றைய தினம் (23-11-2022) குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்தனர்.

குற்றச்சாட்டுகளை நம்புவதாகக் கூறிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்த விடயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்று கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) அரசியல் ஆதாயத்திற்காக கடத்த ராஜபக்ச குலத்தினர் முயற்சிப்பதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல் இதற்காக தான் நடத்தப்பட்டதா? சந்திரிகா வெளியிட்ட தகவல்!
Reviewed by Admin
on
November 24, 2022
Rating:
Reviewed by Admin
on
November 24, 2022
Rating:

No comments: