இலங்கையர்கள் நான்காயிரம் பேருக்கு சிங்கப்பூரில் இருக்கும் தொழில்வாய்ப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4000 இலங்கை தாதியர்களுக்கு தொழில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை குறிப்பிட்டார்.
இலங்கை வந்துள்ள அதிகாரிகள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.
இங்குள்ள அடிப்படை செயற்பாடுகள் குறித்து ஆராய சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் 10 அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு சிங்கப்பூர் வழங்கும் மிகப்பெரிய வாய்ப்பு
Reviewed by Admin
on
November 23, 2022
Rating:
No comments: