Responsive Advertisement 2

ஈனர்களால் தீ வைக்கப்பட்ட பாடசாலை மாணவன்



SMZ. சித்தீக் (DMC)


இனிப்புப் பண்டம் கொடுத்து சந்தோசப்படுத்தப்பட வேண்டிய மாணவன் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டதன் ரகசியம் தான் என்ன? சட்டம்- பாதுகாப்பு- நீதி

பதில் சொல்லுமா?


க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 விசேட சித்திகள் (9A) பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே இதில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தான் பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்றதை தமது பாட்டியிடம் கூறிவிட்டு, தந்தையுடன் நேற்று முன்தினம் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இனந்தெரியாத சிலர் குறித்த மாணவனின் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


அம்பிட்டிய பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொள்ளும் நபர்களே இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஈனர்களால் தீ வைக்கப்பட்ட பாடசாலை மாணவன் ஈனர்களால் தீ வைக்கப்பட்ட  பாடசாலை மாணவன் Reviewed by Admin on November 29, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3