ஏ.பி.எம்.அஸ்ஹர்
நிந்தவூர் மாட்டுப்பளை பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற கார் விபத்தில் கார் சாரதி பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுபளை பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இச்சம்பவம் இன்று மதியம் 12 .30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
கல்முனையிலிருந்து திருக்கோயில் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று மரத்துடன் மோதியதில் காரை ஓட்டிச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அத்துடன் குறித்த கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை நிந்தவூர் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
Reviewed by Admin
on
December 15, 2022
Rating:

No comments: