மாத்தறை – வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இதில் காணாமல் போன 17 வயதுடைய மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
நேற்று(17) மாலை மாத்தறை, வெல்லமடம கடலில் குளித்துக் கொண்டிருந்த போது மூன்று மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்.
தேடும் பணி

மேலும், இவர்களில் ஏனைய இருவரையும் Aதேடும் பணி தொடர்வதாக காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் நீராடச் சென்று மாயமான மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு..!
Reviewed by Admin
on
February 18, 2023
Rating:
No comments: