சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு இன்று -22- கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.
IMF நிதியை நாட்டின் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக திறைசேரிக்கு மாற்றுவதற்கு IMF அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதேசமயம் இதற்கு முன்னர் 16 தடவைகள் IMF நிதிகளை மத்திய வங்கியின் டொலர் கணக்கில் மாத்திரமே வைப்பு செய்ய முடியும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“IMF நிதி கிடைத்தவுடன் திறைசேரியின் துணைச் செயலாளரின் கணக்கிற்கு ரூபா அல்லது டொலராக மாற்ற அனுமதித்துள்ளது. கடந்த 16 முறை, IMF எங்களை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை..நாங்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டோம் . மத்திய வங்கியின் டொலர் கணக்கில் நிதியை வைப்பு செய்ய, IMF உடனான விவாதத்திற்குப் பின்னர், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆரம்பத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று IMF ஐ நம்ப வைக்க முடிந்தது. அரசாங்கத்தின் வெற்றிகரமான தலையீடு காரணமாக, நாங்கள் அனுமதி பெற முடிந்தது. IMF நிதியை நாட்டின் தேவைக்கு பயன்படுத்த வேண்டும்,” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Admin
on
March 22, 2023
Rating:

No comments: