வரட்சி காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திற்கு இரு தண்ணீர் பவுசர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கடந்த திங்கள் கிழமை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிடம் இத் தண்ணீர் பவுசர்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றும் பதின் மூவாயிரத்து 200 லீற்றர் தண்ணீரை கொள்ளக் கூடியதான இரண்டு தண்ணீர் பவுசர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நீரினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-சிவக்குமார்-
வரட்சி காரணமாக வவுனியா மாவட்டத்திற்கு இரு தண்ணீர் பவுசர்கள் வழங்கி வைப்பு
Reviewed by Admin
on
October 19, 2017
Rating:
No comments: