மத்திய வங்கியின் 1949 ஆம் ஆண்டு 58 ஆம் இலக்கச்சட்டத்திற்கு அமைவாக வேண்டுமென்றே சேதமடையச் செய்யும் நாணய தாள்களை வைத்திருப்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை (சிறை மற்றும் தண்டப்பணம்) எடுக்கப்படும்.
அந்தவகையில் இம்மாதம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சேதமடைந்த (கிழிக்கப்பட்ட, எழுதப்பட்ட) தாள்கள் இருப்பின் உடனடியாக அருகிலுள்ள வங்கியில் மாற்றீடு செய்துகொள்ளவும். இது இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ அறிவிப்பாகும்.
நாளையும், நாளை மறுநாளும் (30,31) வார விடுமுறை என்பதால் இன்றைய தினம் மாற்றிக்கொள்வதே சிறந்தது.
எனவே புதிய ஆண்டில் புது நாணய தாள்கள் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திக்கு அனைவரும் ஒன்றினையவேண்டும் என்றும் வேண்டப்பட்டுள்ளது. பலர் உண்டியலில் சேமித்து வைத்துள்ள நாணய தாள்கள் மற்றும் சேதமடைந்த தாள்களை உடனடியாக மாற்றவும்.
இன்றைய தினத்திற்குள் காசுகளை மாற்றிக்கொள்ளுங்கள்!
Reviewed by Admin
on
December 29, 2017
Rating:
Reviewed by Admin
on
December 29, 2017
Rating:

No comments: