Responsive Advertisement 2

மஹிந்தவல்ல, கோட்டாபய வந்தாலும் ஆதரவு வழங்க மாட்டோம்- பொதுபல சேனா



பொதுபல சேனா மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஒருபோதும் உதவி புரிய மாட்டாது எனவும் அவ்வாறு செய்யப் போய் கடந்த 2015 ஆம் ஆண்டில் வாங்கிக் கொட்டியது போதும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அரசியலுக்கு வந்தால், பொதுபல சேனாவின் ஆதரவு அவர்களுக்கு கிடைக்குமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஞானசார தேரர் இவ்வாறு கூறினார்.


கோட்டாபயவுக்கு வீட்டு வேலைகள் செய்வதற்கு அதிகம் எஞ்சியுள்ளன. அவற்றை முடித்து விட்டு அரசியலுக்கு வந்தால், இந்த நாட்டு அரசியலை ஒழுங்காக முன்னெடுக்கலாம்.


இருப்பினும், நாம் யாரு அரசியலுக்கு வந்தாலும், எவருக்கும் ஆதரவு வழங்க மாட்டோம். நாம் ஆதரவு வழங்கப் போய் பெற்றுக் கொண்டது போதுமானது. எமது ஆதரவு எப்போதும், புத்தபெருமானுக்கு மட்டுமே ஆகும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.




மஹிந்தவல்ல, கோட்டாபய வந்தாலும் ஆதரவு வழங்க மாட்டோம்- பொதுபல சேனா மஹிந்தவல்ல, கோட்டாபய வந்தாலும் ஆதரவு வழங்க மாட்டோம்- பொதுபல சேனா Reviewed by Admin on December 15, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3