Responsive Advertisement 2

மாணவர்களுக்காக போராட்டத்தை கைவிட ஜனாதிபதி கோரிக்கை





இன்று முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகின்றன. 





இதற்கமைய, 688,573 பாடசாலை மற்றும் தனியார் பரிட்சார்த்திகள் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். 





இதன்படி, குறித்த நேரத்திற்கு முன்னதாகவே பரிட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 





இதேவேளை, ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சாதாரண தர மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, பணிப் புறக்கணிப்பை கைவிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். 





ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.




மாணவர்களுக்காக போராட்டத்தை கைவிட ஜனாதிபதி கோரிக்கை மாணவர்களுக்காக போராட்டத்தை கைவிட ஜனாதிபதி கோரிக்கை Reviewed by Admin on December 12, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3