இரண்டு மாடி வீட்டின் முதல் தளத்தில் கட்டப்பட்ட ஒரு பிளாட், அதன் கதவு பூட்டப்பட்டுள்ளது.
கதவின் வலது பக்கம் ஒரு பெரிய ஜன்னல் திறந்திருக்கிறது, அந்த வழியாகச் செல்பவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்து, வீடியோ எடுத்து, ஜன்னல் அருகே மேசையில் கிடந்த பொருட்களை எடுத்து முன்னும் பின்னுமாகப் பார்க்கிறார்கள்.
காலியாக இருக்கும் சாதாரண பிளாட் போல் தெரிகிறது.
ஆனால் இந்த ஃப்ளாட் தான், தற்சமயம் மும்பை முதல் தில்லி வரை விரிந்துள்ள விசாரணைக்குட்பட்டு நாடு முழுவதும் பேசு பொருளாகியிருக்கும் ஒரு கொடூரக் கொலை வழக்கின் சாட்சி.
மெஹ்ராலி காவல் நிலையத்தின் கீழ் வரும் டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இங்கு வசித்த அஃப்தாப் பூனாவாலா, தனது காதலி ஷ்ரத்தா வால்கரைக் கொன்று பல துண்டுகளாக வெட்டி, மெஹ்ராலி காட்டில் வீசியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மே 18 அன்று அஃப்தாப் ஷ்ரத்தாவை தனது குடியிருப்பில் கொன்று உடலை துண்டுகளாக வெட்டி பல நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததாகக் காவல் துறை கூறுகிறது.
Reviewed by Admin
on
November 18, 2022
Rating:

No comments: