விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்கு பிறகு பாக்யாவின் குடும்பத்தை சீண்ட வேண்டும் என்பதற்காகவே ராதிகா அதே தெருவில் கோபியுடன் வசிக்கிறார். இதனால் கோபிக்கு வரும் கடிதத்தை அவருடைய குடும்பம் வாங்க மறுத்ததால், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களில் முகவரியை மாற்ற வேண்டும் என ராதிகா கோபிக்கு யோசனை செய்கிறார்.
இதனால் ரேஷன் கார்டை வாங்க கோபி பாக்யாவிடம் சென்ற போது அவருடைய அம்மா,’ரேஷன் கார்டு எல்லாம் கொடுக்க முடியாது’ என்று துரத்தி அடிக்கின்றனர். இதனை ராதிகாவிடம் சொன்னபோது, அவர் கோபியை தீட்டி தீர்த்ததுடன்பேயாட்டம் ஆடுகிறார்.
கல்யாணத்திற்கு முன்பு இருந்த ராதிகாவை தொலைத்ததாகவும் மஞ்ச கயிறு ஏறிய பிறகு பைத்தியம் பிடித்தது போல் ஆகி விட்டாயா!’ என்று ராதிகா கழுத்தில் இருக்கும் தாலிக்கயிறை எடுத்து கோபி பாவமாக பேசுகிறார். இதன்பிறகு ராதிகாவிடம் ‘எப்படியாவது நான் ரேஷன் கார்டுடன் வருகிறேன்’ என்று மறுபடியும் பாக்யா வீட்டிற்கு சென்று அங்கிருப்பவர்களுடன் அராஜகம் செய்கிறார்.
ஒரு வழியாக ரேஷன் கார்டு எடுத்த கோபி, அதில் குடும்பத் தலைவராக தன்னுடைய புகைப்படம் இருப்பதை பார்த்து மற்றவர்களிடம் தன்னை நியாயப்படுத்துகிறார். கோபத்தில் பாக்யாவும் நீ எல்லாம் ஒரு குடும்பத் தலைவனா என்று அசிங்கமாக திட்டுகிறார்.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத கோபி அவருக்கு வேண்டிய ரேஷன் கார்டை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு திருடன் போல் தப்பித்து ஓடினார். பிறகு ராதிகாவிடம் தன்னை ஒரு ஹீரோ போல கெத்து காண்பித்த கோபி, இனியாவது ஏதாவது ரொமான்ஸ் எடுபடுமா என்று பிட்டு போடுகிறார்.
ஆனால் ராதிகா அதற்கெல்லாம் சுத்தமாக இடம் கொடுப்பதில்லை. இவ்வாறு 2-வது திருமணத்தை குறித்து கோபி கனவு கோட்டை கட்டியதெல்லாம் தரை மட்டமானதே என்று ராதிகாவை திருமணம் செய்து கொண்டதை நினைத்து நொந்து நூடுல்ஸ் ஆகிறார்
Vijaytv :கோபியின் கனவை தரைமட்டமாக்கிய ராதிகா…! வைரலாகும் ப்ரோமோ…!
Reviewed by Admin
on
November 08, 2022
Rating:
Reviewed by Admin
on
November 08, 2022
Rating:

No comments: