பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள மீன் வகையான சவுக்கு சுறா மீன்களை பிடித்து அவற்றை பேருவளை மீன்பிடி துறைமுகததிற்கு எடுத்து வந்த இரண்டு மீனவர்களை பேருவளை கரையோர பாதுகாப்பு படையின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பேருவளை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவர்கள் வந்த படகை சோதனையிட்ட போது அந்த படகில் இருந்து 40.1 கிலோ கிராம் எடை கொண்ட சவுக்கு சுறா மீன்களின் இரண்டு உடல் பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட சவுக்கு சுறா மீனை பிடித்தவர்களுக்கு நேர்ந்த கதி..!
Reviewed by Admin
on
December 20, 2022
Rating:
Reviewed by Admin
on
December 20, 2022
Rating:

No comments: