பல்லம ரம்பத்தலாவத்த, அடிகம பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை ஏர் ரைபிள் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (13) இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பெண் தற்போது நிகவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரம்பத்தலாவத்தை அடிகம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்
Reviewed by Admin
on
August 14, 2023
Rating:
No comments: