Responsive Advertisement 2

அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு

 



(எஸ்.எம்.அறூஸ்)


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 ஆவது வருட நினைவுதின நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 6.30 மணிக்கு  (16.09.2022)  அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் காலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ரவுப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் தலைவர் எஸ்.எல்.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் ஆத்ம ஈடேற்றத்திற்காக விசேட கத்தமுல் குர்ஆன், மற்றும் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது. விசேட துஆ பிரார்த்தனையை மௌலவி என்.ரி.நசீர் நிகழ்த்தினார்.அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் விசேட ஞாபகார்த்த உரையையும் நிகழ்த்தியமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு  மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதித் தலைவர் அப்துல் கபுர், பிரதிச் செயலாளர் நாயகம் மன்சூர் ஏ காதர், உயர்பீட உறுப்பினர் யு.எம்.வாஹீத், அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஜூனைதீன்  உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் என  பலரும் கலந்து கொண்டனர்.



























 


அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு Reviewed by Admin on September 16, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3