NPP ன் வெற்றிக்காக கைகோர்த்த அரச ஊழியர்கள் SM சபீஸின் வெற்றியை உறுதிப்படுத்த இணைவு
அரச ஊழியர்களுக்கும் எஸ் எம் சபீஸ் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று மருதமுனையில் இடம்பெற்றது
அதன்போது கருத்து தெரிவித்த அரச அதிகாரிகள் கடந்த 5 வருடமாக எஸ் எம் சபீஸ் அவர்களின் நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளோம்
கல்வி திட்ட மாற்றத்திற்காகவும் தேசிய நலனில் அக்கறை கொண்டவராகவும், பள்ளிவாசல் தலைமை ஊடாக வாலிபர்களை வழிப்படுத்தியவராகவும் தொழில் புரட்சி ஏற்படுத்தவும் அதன்மூலம் மக்களின் உயர்தர வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பனிப்பவராகவும் அவரை நாங்கள் கண்டுவந்துள்ளோம்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதனைப்போனறு இந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் ACMC கட்சியோடு இணைந்து எமது மக்களின் பிரதிநிதித்துவத்திற்க்காகவும் எஸ் எம் சபீஸ் அவர்களின் வெற்றிக்காகவும் பாடுபடுவோம் என தெரிவித்தனர்

No comments: