அல்-கிம்மா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் 'றவ்ழதுல் அத்பால்' முன்பள்ளியின் 3வது மாணவர் வெளியேற்று நிகழ்வும்,அல்-கிம்மா விளையாட்டுக்கழகத்தின் சீருடை அறிமுக வைபவமும் இன்று 2017.12.10 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3:00மணிக்கு மீராவோடை சந்தைக் கட்டிட அமீர் அலி கேட்N;பார் கூடத்தில் இடம்பெற்றது.
அல்-கிம்;மா நிறுவனத்தின் பணிப்பாளரும், கல்குடா தொகுதிக்கான சுதந்நிரக் கட்சி அமைப்பாளருமான மௌலவி MMS. ஹாறூன் ஸஹ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொளரவ மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்MLAM. ஹிஸ்புல்லாஹ் (MA) MP அவர்கள் பிரத அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அல்-கிம்மா நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் HM. ஜாபிர் மற்றும் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், என பலரும்; இதில் கலந்து கொண்டனர்.
இதன் போது மழலைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் MI. அஸ்பாக்
அல்-கிம்மா 'றவ்ழதுல் அத்பால்' முன்பள்ளியின் மாணவர் வெளியேற்று நிகழ்வு-2017
Reviewed by Admin
on
December 11, 2017
Rating:





No comments: