அட்டாளைச்சேனை MPCS தலைவரினால் இன்று மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மோசடியை உயர் அதிகாரிகளுக்கு அறிவித்ததன் காரணமாக இயக்குனர் சபை உறுப்பினர் எம்.ஜே.எம்.பைறூஸ் மீது குற்றச்சாட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட MPCS தலைவர் இர்பான் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
அராஜக தாக்குதலுக்குட்பட்ட பைறூஸ் தற்போது அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் இன்றிரவு MPCS காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த அராஜக தாக்குதலை MPCS பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அட்டாளைச்சேனை MPCS இல் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளமை கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Reviewed by Admin
on
May 15, 2023
Rating:

No comments: